அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்: மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்த 2 பேர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும்,.உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சிறப்பு காவல் பிரிவான எஸ்டிஎப்யின் ஏடிஜிபி அமிதாப் யாஷ் ஆகியோர் மீது வெடிகுண்டுகளை வீசுவோம்' என்று மின்னஞ்சல் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

கைது
கைது

இந்த மிரட்டல் குறித்து உத்தரப்பிரதேச போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது லக்னோவைச் சேர்ந்த தஹர் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் மிஸ்ரா என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பாராமெடிக்கல் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் தஹர் சிங் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியதும், ஓம்பிரகாஷ் மிஸ்ரா மிரட்டல் செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in