
தற்போது 90 சதவீதம் பேர் சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்குவதற்காகவே உணவு சாப்பிடுகிறார்கள் என நடிகர் சந்தானம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர் கல்லூரியில் பொதுமக்கள் பயனடையும் விதமாக உணவு அரங்குகள் துவங்கப்பட்டுள்ளது. உணவருந்திக்கொண்டே இங்கு பயிலும் மாணவர்கள் சினிமா சம்பந்தமான தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான ஏற்பாடுகளை கல்லூரி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நடிகர் சந்தானம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், “கிளஸ்டர் கல்லூரியில் சினிமா மீடியா சம்பந்தப்பட்ட படிப்புகளை நடத்தி வருகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கு தினந்தோறும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு உணவு அருந்த வருவதை பொழுதுபோக்கு அம்சமாக ஏற்படுத்தி உள்ளனர்.
நான் படிக்கும்போது ஒரு கேண்டீன் தான் இருக்கும். அந்த கேண்டீனில் அழுக்கு உடை போட்டுக்கொண்டு ஒருவர் இருப்பார். அவர்தான் சமைப்பார், அவர்தான் ஓனர், அவர்தான் சப்ளையர். காலேஜில் அவர் போடுவது தான் சாப்பாடு. நாம் எதுவும் கேட்க முடியாது. அந்த மாதிரியான காலகட்டத்தை இங்கு மாற்றியுள்ளனர்.
இங்கு வரக்கூடிய மக்கள் நல்ல உணவை அருந்துவார்கள். இப்போது உள்ள காலகட்டத்தில் குக் பண்ணி சாப்பிடுவதை விட புக் பண்ணி சாப்பிடுவது தான் அதிகமாக உள்ளது. கோவை மக்கள் மிகவும் அன்பானவர்கள், குசும்பானவர்கள். நான் காமெடி பண்ணுவதால் அவர்களுடன் ஒரு தொடர்பு இருக்கிறது. எனக்கு பிடித்தமான உணவு சாம்பார், உருளைக்கிழங்கு ஃபிரை. அதுதான் பிடிக்கும்.
முக்கியமாக, முந்தைய காலத்தில் கல்லூரி கேண்டினில் எதிர்த்து எதுவுமே கேட்க முடியாது. அப்போ ஜெயிலர் ரஜினி மாதிரி பேசுவார்கள். நான் வைக்கிறதுதான் சாம்பார் சாதம். கப்புச்சுப்புனு போயிரணும் என்று. உணவு என வந்தாலே 90% யூடியூபில் போட்டு லைக் வாங்குவதற்கு தான் சாப்பிடுகிறார்கள். படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும். சினிமா அதைத்தான் எதிர்பார்க்கிறது” என்றார்
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!