நடிகர் பிரபுதேவா- ரஹ்மான் இருவரும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது.
நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான ’காதலன்’, ‘மின்சாரக் கனவு’ உள்ளிட்டப் பல படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘என்னவளே அடி என்னவளே’, ‘பேட்டராப்’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களும் வெளியாகி இருக்கிறது. இந்த ஜோடி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. நடிகர் யோகிபாபு பங்கேற்கும் காட்சிகள் அடுத்த கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கப்பட உள்ளன.
ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இருவரின் ஸ்டைலிஷான புரோமோவும் வெளியாக உள்ளது. பொழுதுபோக்கு படமாக அதிக நகைச்சுவையுடன் படம் உருவாகி வருவதாக இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் 2025-ல் பான் இந்திய வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வர இருக்கிறது. ரசிகர்கள் இந்தப் படத்திற்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?
நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!
காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!
கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!