மலேசியாவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் மாஸ்டர்ஸ் போட்டியில் தாய்லாந்தின் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து பங்கேற்று விளையாடி வருகிறார். நேற்று சீனாவின் யூ ஹானை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
அரையிறுதிப் போட்டியில் முன்னணி வீராங்கனையான தாய்லாந்து நாட்டின் புசானன் ஒங்பாம்ருங்பனை அவர் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 13-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த போதும், அடுத்தடுத்து தனது திறமையான ஆட்டத்தை சிந்து வெளிப்படுத்தினார். 21-16, 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்டுகளை பி.வி.சிந்து கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவின் வேன் ஜீயியை, சிந்து எதிர்கொள்ள உள்ளார். கடந்த 2023ம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு சிந்து முன்னேறுவது இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!
நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்
ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!