ஆ.ராசாவின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை 
அரசியல்

ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட பெண் அதிகாரி சஸ்பெண்ட்... தேர்தல் நடத்தும் அலுவலர் அதிரடி!

காமதேனு

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரியை பணியினை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச்சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆ.ராசாவின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

இந்த வாகன சோதனைகளில் மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலை மாவட்டமான நீலகிரியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.

ஆ.ராசாவின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா என்பவர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக பரிசோதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா, முறையாக வாகனப் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT