கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம் 
க்ரைம்

செங்கல்பட்டில் பரபரப்பு... குளத்தின் அருகே கிடந்த சடலம்; மர்மமாக கொல்லப்பட்ட வாலிபர்

காமதேனு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓதியூர் மாதா குளம் அருகே, அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், குளத்துக்கு அருகே சடலமாக கிடந்தவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னதாக உயிரிழந்து கிடந்தவரின் சட்டைப்பையை சோதிட்ட போது, அதில் இருந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொல்லப்பட்ட இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சரஸ்வதி நகர் நாலாவது தெருவைச் சேர்ந்த சோழராஜன் (வயது 36) என்பதை கண்டறிந்தனர்.

மேலும், கொலை செய்யப்பட்டவர், ஓதியூர் பகுதிக்கு எப்படி வந்தார். இவரை வெட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் செய்யூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!

‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!

கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!

17 வயது சிறுமி பலாத்கார புகார் பின்னணியில் அரசியல் சதியா? மவுனம் கலைத்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

SCROLL FOR NEXT