
90 வயது மூதாட்டி வயிற்றில் இருந்த இரண்டரை கிலோ புற்றுநோய் கட்டியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது குருபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாம்பூர். 90 வயதான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மூதாட்டியின் வயிற்றின் பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருப்பதை மருத்துவர்கள் ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2.30 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 2 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி மற்றும் அதன் கழிவுகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி எடுத்தனர். இதன் மூலம் மூதாட்டிக்கு மறுவாழ்வு அளித்தனர் மருத்துவர்கள். தற்போது மூதாட்டி நீலாம்பூர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்
பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!
தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!