மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி கொண்டால் இலவசம் என போட்டி அறிவித்த ஈரோடு தனியார் உணவகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களின் அடிப்படையே மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையேயான போட்டி தான். பல குடும்பங்களிலும் மாமியார் மருமகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வந்தாலும், தொலைக்காட்சியில் துவங்கி திரைப்படங்கள் வரை இந்த இருவருக்கிடையேயான உறவுகள்தான் முக்கிய கதை அம்சமாக இருந்து வருகிறது. அதிலும் பல சீரியல்களிலும் இந்த உறவுகளுக்கு இடையேயான சிக்கலை பூதாகரமாக்கி காட்சிப்படுத்துவதால், நன்றாக இருக்கும் குடும்பங்கள் கூட ஒருவருக்கொருவர் முட்டிக் கொள்ளும் நிலை உருவாகிவிடுகிறது.
இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தனியார் உணவகம் ஒன்று அறிவித்திருந்த போட்டி பல்வேறு தரப்பினர் இடையேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், ஈரோட்டை சேர்ந்த வேதாஸ் என்ற உணவகத்தின் உரிமையாளர் பூபதி போட்டி ஒன்றை அறிவித்தார். அதன்படி மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை முழுவதுமாக ஊட்டி விட்டால், உணவு இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்த போட்டியை அறிவித்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த போட்டி அறிவிக்கப்படுகிறது.
இதில் ஈரோடு மட்டுமன்றி அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாமியார் மருமகள்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி மகிழ்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் உணவகத்தில் போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாமியார் - மருமகள் ஜோடிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் உணவு வகைகளை பாசத்துடன் ஊட்டி விட்டு மகிழ்ந்தனர். இந்த போட்டியின் முடிவில் வெற்றி என்பது மாமியார் மருமகளுக்கு இடையேயான உறவு மட்டுமல்ல. உணவு வீணாக்கப்படக்கூடாது என்பதும் இதன் நோக்கமாகும். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இரு விதை பந்துகளையும் இந்த உணவகம் சார்பில் வழங்கி வருவது மேலும் சிறப்பான அம்சமாகும்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!
ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!
அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!