தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

அமைச்சர் சேகர் பாபு - ஆளுநர் ஆர்.என்.ரவி
அமைச்சர் சேகர் பாபு - ஆளுநர் ஆர்.என்.ரவி

``ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்'' என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுக ஆட்சியில் 6 ராஜ கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 6 ராஜ கோபுரங்கள் கட்டப்பட்டு வருகிறது. 13 திருத்தேர்கள் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது வீதி உலா வந்து கொண்டு இருக்கிறது.

குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.85 லட்சம் செலவில் 5 ராஜகோபுரங்கள் கட்டவும், ரூ.53 லட்சத்தில் புதிய மரத்தேர், அன்னதான கட்டிடம் ரூ. 49 லட்சம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சியில் இதுவரை 1093 கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 5472 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் தமிழகத்தின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறியடித்து தமிழக அரசு செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டு அரசுக்குத் தொந்தரவு செய்து வருகிறார் ஆளுநர்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in