வாக்களித்த வள்ளல்களுக்கு நன்றி... தேர்தல் சூடு ஆறுவதற்குள் போஸ்டர் ஒட்டிய பாஜக வேட்பாளர்!

போஸ்டர்
போஸ்டர்

இன்று வாக்குப்பதிவு நிறைவடையும் முன்பே வடசென்னை மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பாஜக வேட்பாளர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 39 மக்களவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 68,321 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து , ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்.
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்.

7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில்தான், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் அவர்கள் சார்பாக பாஜக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர், வாக்குப்பதிவு முடிந்து சில நிமிடங்களிலேயே வாக்காளர்களுக்கு நன்றி போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வடசென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போஸ்டர்
போஸ்டர்

வட சென்னையில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால்கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in