சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் நகர்ப்புற மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், ஸ்ட்ராங் ரூமில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஸ்டிராங்க் ரூம் (கோப்பு படம்)
ஸ்டிராங்க் ரூம் (கோப்பு படம்)

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, ”லயோலா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 156 கேமராக்கள் கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான முறைகேடுகளும் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஆனால் நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாக இருந்துள்ளது.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in