தமிழக அரசைக் கலைப்பது குறித்து எல்.முருகன் யோசித்து தான் பார்க்கட்டுமே... சவால் விட்ட உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இன்று காலை இளைஞர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவர், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலைய பணிகளைப் பார்வையிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு பேருந்து நிலைய பணிகள் தொடங்கிய நிலையில் 6 ஆண்டுகள் கடந்தும் பேருந்து நிலைய பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அமைக்கப்பட்டு பாழாகி வரும் சர்வதேச தரத்திலான நீச்சல் குளத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " நீதிமன்ற வழக்கு காரணமாக பேருந்து நிலைய கட்டிடப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. நவம்பர் 30-ம் தேதிக்குள் முழுமையாக பணிகள் நிறைவு பெற்று டிசம்பர் மாதத்தில் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார்" என்று தெரிவித்தார்.

மேலும்," நீச்சல் குளத்தை சீரமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.

அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் எந்த மாநில அரசும் கலைக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழக அரசை கலைக்கும் யோசனை இல்லை என மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் எல் முருகன் பேட்டி குறித்த கேள்விக்கு, "யோசித்து தான் பார்க்கட்டுமே" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருமுறை பதிலளித்தார். தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in