மக்களிடமிருந்து விலகியவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்: சசிதரூர் மீது நட்டா தாக்கு!

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூரை, கேரள மக்கள் தோற்கடிப்பார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கேரள மாநிலத்தில் வரும் 26ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

சசிதரூர்
சசிதரூர்

இந்நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சசிதரூர் பேசுகையில், கேரளாவில் பாஜகவால் வங்கிக் கணக்கை மட்டுமே தொடங்க முடியும் என குறிப்பிட்டு, தேர்தலில் அக்கட்சியால் வெற்றி கணக்கை துவங்க முடியாது என மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சசிதரூரின் இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எக்ஸ் தளத்தில் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், “அவமதிப்பு, உயர் வர்க்கம் மற்றும் ஆணவம் ஆகியவற்றைப் பாருங்கள்!
ஏழைகளுக்காக வங்கிக் கணக்குகளைத் திறப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். காங்கிரஸ் ஒருபோதும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

ஏனெனில் அவர்கள் வாக்கு வங்கிகள் மற்றும் ஒரு வம்சத்தின் வங்கிக் கணக்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர். இத்தகைய மக்களிடமிருந்து விலகிய சக்திகளை கேரளா தோற்கடிக்கும்!” என குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தொடர்ச்சியாக 3 முறை வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in