பசு சாணத்தை அரசே ரூ.2க்கு வாங்கிக் கொள்ளும்... காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி!

அசோக் கெலாட் ராகுல் காந்தி 
சச்சின் பைலட்
அசோக் கெலாட் ராகுல் காந்தி சச்சின் பைலட்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் அசோக் கெலாட் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும், இது இரண்டு அல்லது மூன்று தவணைகளாக பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முக்கியமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். அதேபோல 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

மேலும் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் சில முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப்லட் வழங்குவது, 1 கோடி பெண்களுக்கு மூன்று வருடத்திற்கு இன்டெர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள், பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதற்கான சட்டம், பேரிடரில் பாதிக்கப்படும் மக்களுக்கு ரூ.15லட்சம் காப்பீடு, பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கி கொள்ளும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in