மகாத்மா காந்தி பிறந்தநாளில் ஒன்று கூடிய ஆளுநர், முதல்வர் ஸ்டாலின்!

மகாத்மா காந்திக்கு ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மகாத்மா காந்திக்கு ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பலவற்றிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கருத்து மோதல் நடந்து வருகிறது. சனாதனம் உள்ளிட்ட விவகாரங்களிலும் ஆளுநர் மற்றும் அரசுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

 ஆளுநர், முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர், முதல்வர் ஸ்டாலின்

இந்தநிலையில், மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளையொட்டி ஒரே மேடையில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இன்று பங்கேற்றனர். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் காந்தியின் நினைவைப் போற்றக்கூடிய பஜனைப் பாடல்களை மாணவிகள் பாடினர். அதனை ஆளுநரும், முதல்வரும் ரசித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in