அண்ணாமலை ஜெயிக்கணும்... கை விரலைத் துண்டித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!

துரை.ராமலிங்கம்
துரை.ராமலிங்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அருண் வார்னகேர்
அருண் வார்னகேர்

கடலூர் மாவட்டம் ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை.ராமலிங்கம். இவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோயம்புத்தூர் தொகுதியில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர். அந்தவகையில் துரை. ராமலிங்கமும் கோயம்புத்தூரில் கடந்த 10 தினங்களாக தங்கி  அண்ணாமலைக்காக பிரச்சாரம் செய்து வந்தார். 

நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென தனது இடது கை ஆட்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார் ராமலிங்கம். “அண்ணாமலை வெற்றி பெறுவார்” என்று முழக்கம் இட்டவாறே கைவிரலை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தொண்டர்கள், ரத்தம் பெருக்கெடுத்த நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மோடியுடன் அண்ணாமலை
மோடியுடன் அண்ணாமலை

அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விரல் இணைக்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த அருண் வார்னகேர் என்பவர் நரேந்திர மோடி இந்த முறையும் பிரதரமராக வேண்டும் என்பதற்காக தனது இடது கை ஆள்காட்டி விரலை வெட்டிக் காளிக்கு பலி கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. அதே வழிமுறையைப் பின்பற்றி அண்ணாமலைக்காக தமிழகத்தில் பாஜக தொண்டர் ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in