அனைத்து வழக்குகளும் பொய்... அர்விந்த் கேஜ்ரிவால் ஆவேசம்!

அனைத்து வழக்குகளும் பொய்... அர்விந்த் கேஜ்ரிவால் ஆவேசம்!

தனது கட்சி தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

சஞ்சய் சிங் எம்.பி
சஞ்சய் சிங் எம்.பி

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தியபின் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே சிறையில் உள்ளார். இதில் வரும் ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்குப் போகிறது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘ஊழல் பணம் ஆம் ஆத்மி கட்சிக்குப் போகிறது என்றால் வழக்கில் அக்கட்சியை சேர்க்காதது ஏன்?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியை அந்த வழக்கில் சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " எனது கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை. ஏஜென்சிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஆனால், இந்த விசாரணையில் இருந்து எதுவும் வெளிவரவில்லை. இது அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எல்லோரையும் பொய் வழக்குகளில் சிக்க வைத்துக்கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சி அடையாது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in