அண்ணாமலை
அண்ணாமலை

திமுக ஆட்சியில் காங்கிரஸ் தலைவருக்கே இதுதான் நிலை... பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

நெல்லை  கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர வேண்டும் என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். தனது உயிருக்கு ஆபத்து என்று அவர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து அனைவரிடமும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில்  இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  'காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர்  ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in