கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு குப்பைக்கூடையுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்
கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு குப்பைக்கூடையுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்

குப்பைக் கூடையுடன் கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள்... கோவையில் பரபரப்பு!

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் குப்பைக்கூடையுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகிய 3 பேரும் கைகளில் குப்பைக் கூடைகளுடன் வந்தனர்.

தனியாருக்குக் குப்பை எடுக்க விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும், வீடு வீடாகக் குப்பை எடுக்காத நிலையில், எதற்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அவர்கள், மாநகராட்சி மாமன்ற கூட்ட அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன்
பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன்

பின்னர் பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், “ 2 மாதங்களுக்குப் பின்பு இன்று மாமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது. தனியாருக்கு 170 கோடி ரூபாய் குப்பை எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் குப்பைகளை ஓழுங்காக எடுப்பதில்லை. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லையெனில் கட்சி தலைமை அனுமதி பெற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். டெண்டர் விடப்பட்ட பின்னர் , குப்பை எடுக்க போதுமான வாகனங்களை தனியார் நிறுவனம் பயன்படுத்துவதில்லை. யாரோ ஒரு தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது” என்றார்.

மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் கூட்டம் நடைபெற்றது
மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் கூட்டம் நடைபெற்றது

இன்றைய கூட்டத்தில் 109 பொருள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 102வது பொருளாக, மாநாகராட்சி பகுதியில் தொழில், வணிக நிறுவனங்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் வலியுறுத்தினா். இதனை அடுத்து அந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போல சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைக்கப்பட்டதால், கோவை மாநகரில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாகவும், அணையின் நீர்மட்டத்தை குறைக்க கேரளா அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக பேசிய மேயர் கல்பனா, இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், நகராட்சித்துறை அமைச்சரிடம் கலந்து பேசிய பின்னர் இதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

x
காமதேனு
kamadenu.hindutamil.in