சென்னையில் 3 தொகுதிகளிலும் மந்தம்... தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குப்பதிவு!

வாக்குப்பதிவு விறுவிறுப்பு
வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தமிழ்நாட்டில் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு வெளியே சாமியானாக்கள் கட்டப்பட்டு நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு வசதிகள்
தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு வசதிகள்

இதனால் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களித்து வரும் நிலை்யில், 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 51.41 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாகவே உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in