தமிழ்நாட்டில் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு வெளியே சாமியானாக்கள் கட்டப்பட்டு நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களித்து வரும் நிலை்யில், 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 51.41 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாகவே உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
3 மணி நிலவரப்படி கரூரில் 59.56 சதவீதம், கோவையில் 47.03 சதவீதம், நீலகிரியில் 53.02 சதவீதம், அரக்கோணத்தில் 51.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!
கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!
பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!
ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!
பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!