ஆந்திராவில் என்டிஏ கூட்டணிக்கு அமோக ஆதரவு... ரோஜா உட்பட அமைச்சர்கள் பலர் பின்னடைவு

ஜெகன்மோகன் ரெட்டியுடன் ரோஜா...
ஜெகன்மோகன் ரெட்டியுடன் ரோஜா...

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ரோஜா 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் உள்ள 175 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சி 120 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்
பிரதமர் நரேந்திர மோடியுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் மட்டுமே தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த பலரும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணும் பணி
வாக்கு எண்ணும் பணி

அமைச்சர் ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி பார்த்து சார்பில் கலி பானு பிரகாஷ் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி 12 ஆயிரம் வாக்குகள் பெற்று ரோஜாவை காட்டிலும் 5,640 வாக்குகள் அதிகம் பெற்று பானு பிரகாஷ் முன்னிலை வகிக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in