காதல் விவகாரத்தில் அதிர்ச்சி... சங்கரன்கோவில் அருகே போலீஸ் சுருக்கெழுத்தர் வெட்டிப் படுகொலை

படுகொலை செய்யப்பட்ட காவலர்
படுகொலை செய்யப்பட்ட காவலர்

சங்கரன்கோவில் அருகே காதல் விவகாரத்தில் போலீஸ் சுருக்கெழுத்தர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வின்துரை என்பவரது மகன் பெரியதுரை (30). இவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்தார். இதே ஊரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரது மகன் அருண்குமார் (28). இவர் காதலித்த பெண்ணை பெரியதுரையின் உறவினர் அல்லித்துரை என்பவர் திருமணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அல்லித்துரைக்கும், அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

காதல்
காதல்

இந்நிலையில், இன்று காலையில் அல்லித்துரையை தொலைபேசியில் தொடர்புகொண்ட அருண்குமார், உன்னிடமும் உனது உறவினர் பெரியதுரையிடமும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கூறியபடி பெரியதுரையை அழைத்துக்கொண்டு கல்லத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அல்லித்துரை சென்றுள்ளார்.

தன்னுடன் ஒருவரை அழைத்துச் சென்ற அருண்குமார், செல்போனில் உள்ள வீடியோவை பார்க்குமாறு பெரியதுரையிடம் கூறியுள்ளார். அவர் வீடியோவை பார்த்தபோது, அரிவாளால் அவரை அருண்குமார் வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அல்லித்துரை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பெரியதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியதுரையின் ஐடி கார்டு
பெரியதுரையின் ஐடி கார்டு

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in