நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

நாளை தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லிகைப்பூ விற்பனை
மல்லிகைப்பூ விற்பனை

பொதுவாக பண்டிகைக் காலங்களில் பூக்களின் விலை உயர்வது வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. பொங்கல் பண்டிகை காலங்களில் கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000 வரை விற்பனையான நிலையில், நாளை தை அமாவாசை என்பதால், இன்று மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ 1000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 1ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -150, பட்டன் ரோஸ் - 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகை
மல்லிகை

நேற்று மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 2 ஆயிரம் ரூபாய் என ஒரே நாளில் இருமடங்காக விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையிலும் மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in