இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்! விமான நிலையத்திற்கு ரூ.60 லட்சம் அபராதம்!

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்! விமான நிலையத்திற்கு ரூ.60 லட்சம் அபராதம்!

மும்பை விமான நிலைய ஓடுதள பாதையில் பயணிகள் அமர்ந்து உணவருந்திய சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களுடன் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனமான எம்.ஐ.ஏ.எல். ஆகியவற்றுக்கும் சேர்த்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பும், விமான போக்குவரத்து இயக்குநரகமும் மொத்தம் ரூ.2.70 கோடி அபராதம் விதித்துள்ளது. இதில் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதமும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ஓடுதளத்தில் இறங்குவதிலும், கிளம்புவதிலும் பெரும் சிக்கல் நிலவி வருவதால், காலதாமதம் காரணமாக பயணிகளுக்கும், விமான நிறுவனப் பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவாவில் இருந்து கோவா செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாக விமான நிலையத்தில் இருந்து கிளம்பாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் விமானியைத் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதே விமானம் கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட நிலையில், அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி செல்லாமல், மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறங்கிய போது, ஓடுதளத்திற்கு அருகில் உள்ள விமானங்கள் நிறுத்தும் இடமான டார்மாக் பகுதியில் அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர்.

விமானத்தின் ஓடுபாதையில் பயணிகள் அமர்ந்து உணவருந்தும் காட்சி வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் இணையத்தில் வெளியானதை அடுத்து இந்த சம்பவம் குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வியைத் தழுவியதாகவும் விமான நிலைய செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பில் அலட்சிய போக்கைக் கடைப்பிடித்திருப்பதாக கூறி இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதமும், மும்பை விமான நிலைய நிர்வாகத்திற்கு ரூ.60 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே காரணங்களுக்காக ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பும், விமான போக்குவரத்து இயக்குநரகமும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டு... அயோத்தி ராமர் கோயிலுக்கு சாலை வழியாக அனுப்பப்படுகிறது!

அயோத்தி ராமரை பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்னேஷ்சிவனுக்கு டாட்டா பை... பை... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in