பாகிஸ்தானில் யோகா பயிற்சி அறிமுகம்: இஸ்லாமாபாத் பூங்காவில் இலவச வகுப்பு

இஸ்லாமாபாத் பூங்காவில் இலவச யோகா பயிற்சி
இஸ்லாமாபாத் பூங்காவில் இலவச யோகா பயிற்சி
Updated on
2 min read

உலகளாவிய கவனம் பெற்ற பிறகு, பண்டைய இந்தியாவின் யோகா பயிற்சியானது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

இஸ்லாமாபாத்தின் பராமரிப்புக்கு பொறுப்பான மூலதன மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ) தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், இஸ்லாமாபாத் பெருநகரக் கழகம் சார்பில் தலைநகரில் எஃப்-9 பூங்காவில் இலவச யோகா வகுப்புகளை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்க பலர் ஏற்கெனவே யோகா வகுப்பில் இணைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளது. யோகா பயிற்சிகளில் பங்கேற்ற நபர்களின் படங்களையும் சிடிஏ வெளியிட்டுள்ள பதிவில் இணைத்துள்ளது.

சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தின தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவால் முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபை, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது. இந்தியாவின் இந்த முன்மொழிவு தீர்மானம் 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

யோகா வகுப்புகளை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையை பல நாடுகள் பாராட்டின. மேலும், பல நாடுகள் யோகா நிகழ்ச்சி திட்டம் குறித்து விசாரித்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மிக முக்கியமான பூங்காவில் அதிகாரப்பூர்வமாக யோகா வகுப்பு துவங்கப்பட்டுள்ளது அதிகார மட்டத்தில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். காஷ்மீர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இருதரப்பு உறவுகளில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகா பயிற்சி
யோகா பயிற்சி

யோகா வகுப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இதனை வரவேற்ற குடியிருப்புவாசி ஷாகித் இக்பால் என்பவர் , “இது ஒரு நல்ல முன்னெடுப்பு; எனக்கு நேரத்தை தெரிவியுங்கள்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், எதிர் கருத்துகளும் வந்துள்ளன. அதே நகரை சேர்ந்த மற்றொரு நபர் கூறுகையில், “இஸ்லாமாபாத்தின் மக்களுக்கு ஒழுக்கமான குடியிருப்பு வசதிகளை வழங்குவதில் சிடிஏ தவறிவிட்டது. அதற்குப் பதிலாக இதுபோன்ற ஷோக்களை நடத்துவதில் இறங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in