இஸ்ரேல் தாக்குதலில் பெண் தலைவர் பலி - உறுதிப்படுத்தியது ஹமாஸ்!

ஹமாஸ் பெண் தலைவர்
ஹமாஸ் பெண் தலைவர்

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவின் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்ட தகவலை ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி எல்லை தாண்டி இஸ்ரேல் மீதுதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எந்த நேரத்திலும் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்த போரினால் பாலஸ்தீனியர்கள் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் படையினர் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. அது உறுதியா என்று தெரியாத நிலையில், ஹமாஸ் இயக்கம் பெண் தலைவர் கொல்லப்பட்டதை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர்

ஹமாஸ் அரசியல் பிரிவில் இருந்த ஒரே பெண் தலைவரான ஜமீலா அல் சன்டி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். காசாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உறுப்பினராகவும் ஜமீலா இருந்து வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in