ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபரின் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி, போண்டி சந்திப்பில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் வணிக வளாகத்தில் (ஷாப்பிங் மால்) துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் வெளியான தகவலை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வணிக வளாகத்திலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில் பல்வேறு பதிவுகள் வணிக வளாகத்திலிருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீஸார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது.
இந்த அசம்பாவித சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் 'சிட்னி மார்னிங் ஹெரால்ட்' செய்தி தகவல் தெரிவிக்கிறது.
நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போண்டி சந்திப்பு, வெஸ்ட்ஃபீல்டில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பலர் கத்தியால் குத்தப்பட்டதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அவசர சேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆஸ்திரலியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!
ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!
தடுப்புகளைத் தாண்டி இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!
தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!