கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதி உள்ளதா... மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலக புகழ்ப்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சி என்பது மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் போது மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கப்படும். இந்த கோயிலில் தற்போது அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார்.

அவர் கணவரை இழந்தவர் என்பதால் அவர் செங்கோல் வாங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் என்பவர் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, “இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மனு ஒன்று இரண்டு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரணை செய்து இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் இதுபோன்ற மனுக்கள் வருவது மன வருத்தத்தை தருகிறது” என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதி சரவணன் மனுதாரர் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர், “ மதுரை மீனாட்சியம்மன் கோயில் விழாவில் திருமணம் ஆகாதவர்கள், வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது?.

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

அதுமட்டுமின்றி கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்?. செங்கோல் வாங்குபவரும் இந்துதானே? அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது. நவீன காலத்திலும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. பிற்போக்குத்தனமான கோரிக்கையுடன் வழக்கு தொடர்வதா?” என மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in