பழநி கோயில் தேவஸ்தான நிர்வாகக் கடையில் காலாவதியான பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
முருகப்பெருமானின் 3வது வீடு என்று புகழப்படும் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதனை வாங்கிச்செல்கின்றனர். உணவு பாதுகாப்பு துறையின் சோதனைக்குப் பிறகு இந்த பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக பழநி கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பழநி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு ஜிஐ டேக் என்ற புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், 15 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில், தயாரிப்பு தேதி இல்லாமல் காலாவதியாகிய பின்னரும் விற்பனை செய்யப்படுவதாக ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை நிர்வாகி செந்தில் குமார் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது.
இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பழநி முருகன் கோயிலில் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டனர். பிரசாதங்கள் கெட்டுப்போன வாசனை அடிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்து இருந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆய்வுக்காக பிரசாதங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர்.
குறிப்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் இன்று வரை விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாகவும், இதனை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!
ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!
பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!