அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

அசோக்
அசோக்

கலபுர்கியில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர், மர்மக்கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு அனைத்து கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பல இடங்களில் ஊர்வலமும் நடத்தப்பட்டது. அப்படி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், மர்மக்கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர்

கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலம், ஜேவர்கி கிராஸ் அருகே சென்று கொண்டிருந்த போது ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு இளைஞரை, திடீரென ஒரு கும்பல் வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்த கும்பல், அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அசோக் நகர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் அசோக் நகர் பகுதியில் உள்ள பரங்கியைச் சேர்ந்த அசோக்(19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பழைய பகையின் பின்னணியில் அசோக் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. அவரைக் கொலை செய்தது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுர்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in