தெலங்கானாவில் வினோத சம்பவம்... சொத்து பிரச்சினையில் கணவரை சங்கிலியால் கட்டிப்போட்ட மனைவி!

சங்கிலியால் கட்டி போடப்பட்ட பட்டி நரசிம்மா
சங்கிலியால் கட்டி போடப்பட்ட பட்டி நரசிம்மா

தெலங்கானாவில் சொத்துக்காக 45 வயது பெண் ஒருவர் தனது கணவரை சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பட்டி நரசிம்மா (50). இவரது மனைவி பர்தம்மா (45). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பட்டி நரசிம்மாவுக்கும், பர்தம்மாவுக்கும் இடையே தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பட்டி நரசிம்மா, தனது மனைவி பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்டினார். இதனால் ஏற்பட்ட கடன்களை அடைப்பதற்காக, அவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்க முயன்றார். இதன் காரணமாக தம்பதி இடையே தகராறு மூண்டது.

இதனால் விரக்தியடைந்த பட்டி நரசிம்மா கடந்த ஓராண்டுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, புவனகிரி மாவட்டம், படமதி சோமரத்தில் பட்டி நரசிம்மா வசித்து வருவது பர்தம்மாவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் தனது மகன்களுடன் சென்று கணவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரை இரும்பு சங்கிலியில் கட்டி ஒரு அறையில் பூட்டினார்.

இதை அப்பகுதியினர் ரகசியமாக தங்கள் மொபைலில் படம் பிடித்து, உள்ளூர் பிரமுகரான மகேஷ் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இதுகுறித்து காட்கேசர் போலீஸில் புகார் அளித்தார்.

பட்டி நரசிம்மாவை மீட்கும் போலீஸார்
பட்டி நரசிம்மாவை மீட்கும் போலீஸார்

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பட்டி நரசிம்மாவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, தனது மனைவி கடந்த 3 நாள்களாக தன்னை கட்டி வைத்து தாக்கியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து பர்தம்மா, மகன்கள் கணேஷ், ராஜு ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in