பகீர்... காரில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ரூ.1.90 கோடி ஹவாலா பணம் கடத்தல்: இருவர் கைது!

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

கோவையில் இருந்து பாலக்காட்டிற்கு காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.1.90 கோடி ஹாவாலா பணத்தை கேரள போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக- கேரள எல்லைப்பகுதியான வாளையாறு அடுத்த, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி குருடிக்காடு என்ற இடத்தில், கஸ்பா காவல்நிலைய போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த இன்னோவா காரை நிறுத்தினர். ஆனால், கார் நிற்காமல் வேகமாக செல்லவே, அதை ஜீப்பில் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். காரில் இருவர் இருந்த நிலையில், வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர்.

காரில் ரகசிய அறை அமைத்து பணம் கடத்தல்
காரில் ரகசிய அறை அமைத்து பணம் கடத்தல்

அப்போது காரில் இருக்கைக்கு கீழே ரகசிய அறை அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில் 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள முகமதுகுட்டி, முகமதுநிசார்
கைது செய்யப்பட்டுள்ள முகமதுகுட்டி, முகமதுநிசார்

மேலும், காரில் இருந்தவர்கள், கேரளா மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமதுகுட்டி மற்றும் புத்தனங்காடியைச் சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரியவந்தது.

கோவையில் இருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், கோவையில் இருந்து ஹவாலா பணத்தை கொடுத்தவர், மலப்புரத்தில் பணத்தை பெறுபவர்கள் குறித்து பாலக்காடு மாவட்டம் கஸபா காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in