நாம் தமிழர் கட்சி நிர்வாகி இஸ்திரி பெட்டியால் அடித்துக் கொலை: திமுக நிர்வாகி, பாதிரியார்கள் தலைமறைவு!

சேவியர் குமார்
சேவியர் குமார்

கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட புகாரில், திமுக நிர்வாகி, பாதிரியார்கள் உள்பட பலர் தலைமறைவாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மைலோடு அருகே மடத்சுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (42). நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். அத்துடன் திங்கள் நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றினார். இவரது மனைவி ஜெமீலா மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்கு சொந்தமான மதர் தெரசா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரை பள்ளி நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்தது. இதையடுத்து சேவியர்குமார் வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய பங்குத்தந்தை குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசுவதற்காக சேவியர் குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குதந்தை இல்லத்திற்கு வருமாறு பங்கு தந்தை ராபின்சன் அழைத்துள்ளார்.

அங்கு வந்த சேவியர் குமாரிடம் பங்குத்தந்தை ராபின்சன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சேவியர் குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி கொல்லப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதனால் குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம் என கூறி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சேவியர் குமார் உறவினர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி இன்று அதிகாலை 1.45 மணிக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சேவியர்குமார் மனைவி ஜெமீலா, காவல் நிலையத்தில் அளித்த புகாரில்," நாங்கள் மயிலோடு ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். அந்த என்ற முறையில் வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக என் கணவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இது தொடர்பாக புகார் அளித்தும் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து என் கணவரைக் கொன்று விட்டனர்.

எனவே, என் கணவரை தாக்கிக் கொலை செய்த விவகாரத்தில் மைலோடைச் சேர்ந்த ரமேஷ்பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், ஜஸ்டஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெலிஸ், பெனிட்டோ மற்றும் மேலும் 2 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதன்பேரில் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ரமேஷ் பாபு திமுக ஒன்றிய செயலாளராகவும், ராபின்சன், பெனிட்டோ ஆகிய 2 பேரும் பாதிரியாராகவும் உள்ளனர். தலைமறைவாகியுள்ள 15 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படையினர் தலைமறைவானவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in