அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ்நாட்டில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை!

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக  தமிழகத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

உத்தரப்பிரதேச  மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள  ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள முக்கிய  அரசியல் தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்களுக்கு  ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆர்எஸ்எஸ், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கியுள்ளனர்.

ராமர் சிலை
ராமர் சிலை

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, தனுஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆர்எஸ்எஸ், ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி,  துர்கா ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு செல்லவில்லை என்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த்,  தனுஷ்  உள்ளிட்டவர்கள் அதில் பங்கேற்க  அயோத்தி புறப்பட்டுச் சென்றுள்ளனர். முக்கிய பிரமுகர்களைத் தவிர பொதுமக்களுக்கும் அழைப்பிதழும், அட்சதையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  தமிழ்நாட்டில் 90 லட்சம் வீடுகளுக்கு அட்சதையும், அழைப்பிதழும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தமிழ்நாடு தலைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் கூறுகையில்,  "நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் கனவான அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் மற்றும் அட்சதை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் இன்று மதியம் 12 மணி முதல் 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாலை 6 மணிக்கு வீடுகள் தோறும் கார்த்திகை தீபம்போல குறைந்தது 5 அகல் விளக்குகளை ஏற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in