கஞ்சா வழக்கு... சவுக்கு சங்கர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து தேனி போலீஸார் சோதனை!

சவுக்கு சங்கரின் சென்னை அலுவலகம் மற்றும் வீட்டில் தேனி போலீஸார் சோதனை
சவுக்கு சங்கரின் சென்னை அலுவலகம் மற்றும் வீட்டில் தேனி போலீஸார் சோதனை

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, அவரது வாகனத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சங்கரின் சென்னை அலுவலகத்தின் பூட்டை உடைத்து தேனி போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்படும் போது, அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் இன்று சென்னையில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்

சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை தேனி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுடன் சவுக்கு சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பாக ஆவணங்களை திரட்ட இந்த சோதனை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சவுக்கு சங்கரின் வீட்டில் போலீஸார் சோதனை
சவுக்கு சங்கரின் வீட்டில் போலீஸார் சோதனை

சவுக்கு சங்கர் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட போலீஸார், அங்கெல்லாம் கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in