பகீர்... 2 குழந்தைகளைக் கொன்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தாய்!

பகீர்... 2 குழந்தைகளைக் கொன்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தாய்!

தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ரா மாநிலம், நாசிக்கில் உள்ள கோனார்க் நகரைச் சேர்ந்தவர் அஷ்வினி நிகும்ப்(30). இவருக்கு ஆராத்யா(8), அகஸ்தியா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அஷ்வினிக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று அவரது கணவர் வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளுக்கும் அஷ்வினி விஷம் கொடுத்து கொலை செய்தார். இதன் பின் தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து அஸ்வினி கீழே குதித்தார். இதில் தலையில் அடிபட்ட அஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து அஸ்வினி நிகும்ப் உடலை மீட்டனர். அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவரது இரண்டு குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டை போலீஸார் சோதனை செய்த போது, சாவதற்கு முன் அஸ்வினி செல்போனில் பதிவு செய்த வீடியோ இருந்தது.

அதில், தனது கணவர் ஸ்வப்னில் தன்னை துன்புறுத்துவதாகவும், அதனால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்வதாகவும் அஸ்வினி கூறியிருந்தார்.

வேலைக்காக புணே சென்ற அஸ்வினியின் கணவர் ஸ்வப்னிலிடம் போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in