உயிரிழந்த தாயின் சடலத்துடன் 6 நாட்களாக தங்கியிருந்த மகன்... தூத்துக்குடியில் அதிர்ச்சி!

முகமது குலாம் காதர்
முகமது குலாம் காதர்

தூத்துக்குடியில் உயிரிழந்த தாயின் சடலத்துடன் 6 நாட்கள் தங்கி இருந்த மகன் பின்னர் உடலை வீட்டிலேயே புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் குலாபுதீன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி ஆஷா பைரோஸ் (44). கடந்த பல ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு முகமது குலாம் காதர் (22) என்ற மகன் உள்ளார். பொதுவாக காதர், வெளிநபர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

உயிரிழந்த ஆஷா பைரோஸ்
உயிரிழந்த ஆஷா பைரோஸ்

வீட்டில் தாய் மற்றும் மகன் மட்டுமே தங்கி இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ளவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். நேற்று அவரது வீட்டில் இருந்து கட்டிட பணியாளர்கள் சிலர் வெளியேறுவதை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காதரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 2ம் தேதி தனது தாய் ஆஷா இறந்து விட்டதாகவும், 6 நாட்களாக தாயின் உடலுடன் இருந்ததாகவும் கூறினார்.

ஆஷாவின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடம்
ஆஷாவின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடம்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்திய போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஷா உடலில் இருந்து காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வெளியேறி உடல் வீங்கியதாக கூறியுள்ளார். இதனால் கட்டிட வேலை பார்க்கும் சிலரை அழைத்து வந்து வீட்டின் ஓரமாக குழியை தோண்டி அதில் ஆஷாவின் உடலை தானே புதைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தாய் இறந்த வீட்டில் தனியாக இருக்கும் காதர்
தாய் இறந்த வீட்டில் தனியாக இருக்கும் காதர்

பின்னர், மருத்துவர்களை வரவழைத்து புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸின் உடலை நாளை தோண்டியெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆஷா பைரோஸ் இயற்கையாக உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற தகவல் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள காதர், மனநலம் பாதிக்கப்பட்டவராக தோன்றுவதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in