நான் 2 ஓட்டு போட்டே தீருவேன்... 2வது முறையாக வாக்களிக்க முயன்றவர் கைது!

2 முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது
2 முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது

கோவையில் கையில் வாக்களித்த மையுடன், வேறொரு வாக்குசாவடியில் வாக்களிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை நல்லாம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு(52). நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள பூத் எண் 145ல் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்துள்ளார்.

2வது முறை வாக்களிக்க முயன்ற திருநாவுக்கரசு
2வது முறை வாக்களிக்க முயன்ற திருநாவுக்கரசு

அப்போது அங்கிருந்து அதிகாரிகள், இடது கை விரலை காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் தனது வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்குமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்தல் ஊழியர்கள், அவரது இடது கையை பார்த்த போது அதில், ஏற்கனவே வாக்களித்ததற்கான அடையாளமாக அழியா மை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும், காந்திபுரம் பகுதியில் வாக்களித்துவிட்டு நல்லாம்பாளையம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் திருநாவுக்கரசின் மீது 171(D) - போலியான பெயரில் வாக்களித்தல் மற்றும் 171 F(2) - தகாத வாக்கு செலுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து காவல்நிலைய பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in