பகீர்: கேரளா முதலமைச்சருக்கு கொலைமிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநில தலைமை செயலகத்துக்கு நேற்று போன் அழைப்பில் பேசிய சிறுவன் ஒருவர், முதலமைச்சர் பினராயி விஜயன் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கேரள தலைமைச் செயலகம்
கேரள தலைமைச் செயலகம்

விசாரணையில் கொச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் இந்த மிரட்டல் அழைப்பை செய்திருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வரும் போலீஸார், அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

கேரள மாநில போலீஸார்
கேரள மாநில போலீஸார்

ஆயினும் சிறுவன் எதற்காக இவ்வாறு மிரட்டல் விடுத்தான் என்பது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!

குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?

அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!

ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in