பேருந்தில் சில்லறையை சிதற விட்டு 18 சவரன் நகை திருட்டு... பிக்பாக்கெட் ராணி கைது!

பிக்பாக்கெட் ராணி விமலா
பிக்பாக்கெட் ராணி விமலா

ஓடும் பேருந்தில் சில்லறையை சிதற விட்டு, பெண்ணிடம் 18 சவரன் நகையை திருடிய ஆந்திர மாநில பிக்பாக்கெட் ராணியை சென்னை போலீஸார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தில் கைவரிசை காட்டி, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (40). இவர் கடந்த 23-ம் தேதி, கோயம்பேட்டில் இருந்து எம்ஜிஆர் நகருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தார். அசோக் நகர் அருகே பேருந்து வந்தபோது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் டிக்கெட் எடுப்பதற்காக தனது மணி பர்சை எடுத்துள்ளார். அப்போது அவரது மணி பர்சில் இருந்த சில்லறைகள் கீழே விழுந்து சிதறியது.

உடனே அருகில் அமர்ந்திருந்த ராஜலட்சுமி கீழே குனிந்து சில்லறைகளை பொறுக்கி‌ அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அசோக் பில்லர் வந்ததும் அந்த பெண் இறங்கி சென்ற நிலையில் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ராஜலட்சுமி இறங்கி இருக்கிறார். அப்போதுதான் தனது கையில் இருந்த நகைப்பை காணாமல் போனதை உணர்ந்திருக்கிறார். அதற்குள் 18 சவரன் நகை இருந்ததால் அலறித் துடித்திருக்கிறார் ராஜலட்சுமி.

தனக்கு அருகே அமர்ந்திருந்த பெண் சில்லறையை சிதறவிட்டு கைவரிசை காட்டி இருக்கிறார் என்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது. இதுகுறித்து ராஜலட்சுமி, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சந்தேகத்துக்குரிய பெண் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

 திருட்டு
திருட்டு

அப்போது சந்தேகத்துக்குரிய அந்த பெண் பேருந்திலிருந்து இறங்கி மீண்டும் கோயம்பேடு நோக்கி ஆட்டோவில் செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் போலீஸார் சிசிடிவி காட்சியில் பதிவான பெண்ணின் புகைப்படத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல பிக்பாக்கெட் ராணி விமலா (35) என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து தனிப்படை போலீஸார் வேலூரில் பதுங்கி இருந்த விமலாவை இன்று காலை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.‌ விசாரணையில், விமலா தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா என பல மாநிலங் களில் கைவரிசை காட்டியதும், சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியபோதும் இதுவரை போலீஸ் கையில் சிக்காமல் தப்பியதும் தெரியவந்தது.

விமலா
விமலா

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் மீது அரிப்பு பொடியை தூவி திருடுவது, கவனத்தை திசை திருப்பி திருடுவது, சில்லறையை சிதறவிட்டு திருடுவது என பல வித்தைகளில் கைத்தேர்ந்த பிக்பாக்கெட் ராணி விமலா திருட்டை குலத்தோழிலாகவே செய்து வந்திருக்கிறார்.

விமலாவுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளதும், கணவர் குழந்தைகளை பார்த்துக்கொள்ள இவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அந்த வருமானத்தை வைத்து குடும்பத்துடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்களில் இவரது ஊரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முகாமிட்டு தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைவரிசை காட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து போலீஸார் விமலாவிடம் இருந்து சிறிது, நகை பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரது கேங்க் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in