நெல்லையில் பயங்கரம்... சமூக ஆர்வலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

பெர்டின் ராயன்
பெர்டின் ராயன்

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை, மர்ம நபர் அரிவாளால் வெட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பெர்டின் ராயன்
பெர்டின் ராயன்

திருநெல்வேலி பாளையங்கோட்டை  மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பெர்டின் ராயன் (35). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் சமூக ஆர்வலராக சேவையாற்றியும் வருகிறார். திருநெல்வேலியில் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டி திறக்கப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் குறித்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் இவர் வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் நெல்லை மாநகராட்சியின் ரோடு காண்ட்ராக்டில் தனியார் நிறுவனம் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சமூக அக்கறையுடன் கேள்விகள் எழுப்பி வருகிறார்.

பெர்டின் ராயன்
பெர்டின் ராயன்

இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பேட்மின்டன் கிளப்பில் விளையாடுவதற்காக சென்றிருந்தார். அப்போது  அங்குவந்த ஒரு நபர், தான் வைத்திருந்த அரிவாளால் பெர்டின் ராயனை சரமாரியாக  வெட்டினார். இதில் தலை, முதுகு, கைகளில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை  சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சமூக ஆரவலருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் விசாரிக்கின்றனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட அதே தினத்தில், சமூக ஆர்வலர் மீது அரிவாள் வெட்டு நடந்திருப்பது நெல்லையின் சட்டம் ஒழுங்கு குறித்தான கவலையை அதிகரித்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in