பீகார் மாநிலம், பாட்னாவில் மெட்ரோ ரயில் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம், பாட்னா கங்கர்பாக் பகுதியில் பாட்னா மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று மதியம் பயணிகளை ஏற்றி வந்த ஒரு ஆட்டோ, மெட்ரோ ரயில் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கிரேன் மீது பயங்கரமாக மோதியது. ஆட்டோ வேகமாக மோதியதில் கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர்.
அவர்களின் பெயர், முகவரி போன்ற அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!