பெங்களூருவில் ஏஎஸ்ஐ டூவீலரை திருடி அதை வழிப்பறி சம்பவத்தில் பயன்படுத்திய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 31-ம் தேதி நள்ளிரவில் ஷிமோகா நோக்கிச் சென்ற வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அந்த வாகனத்தின் ஓட்டுரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த செல்போனை அந்த கும்பல் பறித்துள்ளது. அத்துடன் அவரிடமிருந்து கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணத்தை கொள்ளையர்கள் திருடினர். இதுகுறித்து ஓட்டுநர், போலீஸில் புகார் அளித்தனர்.
இதன் பேரில, போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் காமாட்சிபாளையம் ஏஎஸ்ஐ நாகராஜின் பைக் திருடப்பட்டதும், அந்த பைக் மூலமே இந்த வாகனக் கொள்ளைக்கும் பயன்படுத்தியது தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
நாகராஜின் பைக் கடந்த மாதம் 28-ம் தேதி திருடப்பட்டது. இது தொடர்பாக காமாட்சிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே பைக்கை பயன்படுத்தி நெடுஞ்சாலையில் கொள்ளை நடந்தது தெரிய வந்துள்ளது. இக்கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான சுஹைல், ஆதி, விஜய், தனுஷ் உள்பட 6 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பைக் மற்றும் 6 செல்போன்கள், மூன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எஏஸ்ஐ பைக்கை திருடி அதை வைத்து வழிப்பறி கொள்ளையில் கும்பல் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!
தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!
மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!