ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... விமானப்படை வீரர்கள் 5 பேர் காயம்

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான பாதுகாப்பு படையினரின் வாகனங்களில் ஒன்று
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான பாதுகாப்பு படையினரின் வாகனங்களில் ஒன்று

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் பாதுகாப்பு படையின் 2 வாகனங்கள் மீது இன்று பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் விமானப்படையின் 5 வீரர்கள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

சூரன்கோட்டின் சனாய் கிராமத்தில் இருந்து இந்த திடீர் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சற்று நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்திய வீரர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதியில் சென்று மறைந்துகொண்ட பயங்கரவாதிகளை வளைக்கவும், பாதுகாப்பினை பலப்படுத்தவும் அங்கே கூடுதல் ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில், ஷாசிதாருக்கு அருகே இந்திய விமானப்படையின் வாகனங்கள் வரிசையாக வருகை தந்தபோது தீவிரவாதிகளால் குறிவைத்து தாக்கப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் இராணுவப் பிரிவுகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயங்கரவாதிகள் மறைந்திருக்கும்சந்தேக இடங்களை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் கான்வாய் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்து உள்ளார்.

உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஷாசிதார் அருகே உள்ள ஜெனரல் பகுதியில் உள்ள விமான தளத்திற்குள் வீரர்களின் வாகனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அனந்த்நாக்-ரஜோரி-பூஞ்ச் ​​மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான பூஞ்ச், தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளதில், அங்கு மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பாதுகாப்பு படை வீரர்கள்
பாதுகாப்பு படை வீரர்கள்

இந்திய விமானப்படை வீரர்களின் வாகனங்களை மீது குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது, கிட்டத்தட்ட 2019ம் ஆண்டின் புல்வாமா தாக்குதலை நினைவூட்டுகிறது. 2019, பிப்ரவரி 14 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் கான்வாய் மீதான தற்கொலை பயங்கரவாதியின் தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். கிட்டத்தட்ட அதே பாணியில் இன்றைய தினத்தின் பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலும் அமைந்துள்ளது.

புல்வாமா போலன்றி விமானப்படை வீரர்களின் இரண்டே வாகனங்கள் அடைங்கிய கான்வாய் மீதான பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு காரணமாக 5 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதாரித்த இந்திய வீரர்களின் எதிர்த்தாக்குதல் காரணமாக பயங்கவரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in