உத்தர பிரதேச மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரின் பின்னால் லாரி மோதிய விபத்தில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிப்ரமாவு மாவட்டத்தின் குன்வார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவரது மகளை பிச்சுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரேந்திரசிங் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக வீரேந்திர சிங் மற்றும் அவரது உறவினர்கள் 25 பேர் டிராக்டர் ஒன்றில் பிச்சுவாவிற்கு கிளம்பியுள்ளனர்.
மெயின்பூர் அருகே இன்று அதிகாலை 4:30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது முகப்பு விளக்குகள் எரியாததால், டிராக்டரை சாலையோரம் நிறுத்தி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் அதிவேகத்தில் வந்த லாரி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில், டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த டிராலி கவிழ்ந்து அதன் அடியில் அமர்ந்திருந்த 4 பேரும் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரில் பழுதான முகப்பு விளக்குகளை சரி செய்ய சாலையோரம் நிறுத்திய போது இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!
விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!
சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!