பாஜக- விசிக பயங்கர மோதல்... 3 பேர் படுகாயம்!

மோதலில் படுகாயமடைந்த பாஜகவைச் சேர்ந்த அருண்
மோதலில் படுகாயமடைந்த பாஜகவைச் சேர்ந்த அருண்

அரியலூர் அருகே பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வாலிபர்களுக்கு மண்டை உடைந்தது. இதனால் அங்கு வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்கபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகே விசிகவைச் சேர்ந்த சிலர் கூட்டமாக கூடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாஜகவை சேர்ந்த அருண் வாக்குச் சாவடி பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் விசிகவினர் அருணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் அருண் மற்றும் விசிகவை சேர்ந்த அஜித், செல்வகுமார் ஆகிய மூவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீஸார் குவிப்பு
போலீஸார் குவிப்பு

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு வாக்குப் பதிவு சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அதன் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு துவங்கியது.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in