கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மசூதி அருகே 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கமிட்டவர்கள் மீது தாக்குதல்... சிறுவன் உள்பட 3 பேர் கைது!

பெங்களூருவில் மசூதி அருகே ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பியவர்களைத் தாக்கியதாக சிறுவன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு வித்யாரண்யபுராவில் உள்ள சிக்கபெட்டல்லி மசூதி அருகே நேற்று முன்தினம் காரில் சென்ற சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியவாறு சென்றுள்ளனர்.

சிக்கபெட்டல்லி மசூதி
சிக்கபெட்டல்லி மசூதி

அப்போது அப்பகுதியில் இருந்த சில இளைஞர்கள், காரில் இருந்தவர்களை வழிமறித்து, இந்த பகுதியில் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிடாதீர்கள் என்று திட்டியுள்ளனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பானது. அப்போது காரில் இருந்த இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்.18 அன்று வித்யாரண்யபுரா காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக எம்.பி- ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார். அத்துடன் தாக்கப்பட்ட இளைஞர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காரில் வந்த இளைஞர்களைத் தாக்கியதாக ஃபர்மன், சமீர் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டதாகவும், அதில் இருவர் சிறுவர்கள் என்று வித்யாரண்யபுரா போலீஸார் கூறினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்பட்டதால், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in