டெல்லியில் கொடூரம்... 2 வயது குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்கள்!

தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு
தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு

டெல்லியில் 2 வயது குழந்தை, தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் தாக்குதலில் கால்நடைகள் உயிரிழப்பதோடு, பொதுமக்கள் மற்றும் சிறு குழந்தைகள் காயம் அடைவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் 2 வயது குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த சிறுமி திவ்யான்ஷி
உயிரிழந்த சிறுமி திவ்யான்ஷி

புதுடெல்லியின் துக்ளக் லேன் பகுதியைச் சேர்ந்த குழந்தை திவ்யான்ஷி. கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் குழந்தை திவ்யான்ஷி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் திடீரென குழந்தையை தாக்கிக் கடித்து குதறியுள்ளன. 5 நாய்கள் சுமார் 100 முதல் 150 மீட்டர் வரை குழந்தையை இழுத்துச் சென்றுள்ளன. குழந்தையின் அழுகுரலை கேட்டு வெளியில் வந்த பெற்றோர், தெருநாய்களிடமிருந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு
தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு

மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று மாலை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனிதர்களை தெருநாய்கள் கடித்துக் குதறுவது இது முதல் முறை அல்ல என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தெரு நாய்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி கால்நடை மருத்துவர்கள், அங்கிருந்த நாய்களை பரிசோதனை செய்த போது அவற்றுக்கு ரேபிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர். இருந்தபோதும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எம்பி-க்கள் குரல் எழுப்பியுள்ள நிலையில், தலைநகர் டெல்லியிலேயே குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in