
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தருக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்ததும் கொடுத்துள்ள பேட்டியில் தனது மனைவி குறித்து அவர் பேசியுள்ளார்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனரான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் போலீஸார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது, பிணைத் தொகை கொடுத்து அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
வெளியே வந்ததும் யூடியூப் தளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன் மனைவி மகாலட்சுமி குறித்துப் பேசியுள்ளார். ‘என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லும் போது எப்படி உட்காருவ, எப்படி எந்திருப்ப என மகா கேட்கும் போது நொறுங்கிப் போயிட்டேன்.
என் உடல் மற்றவர்கள் உடல் போல அப்படியெல்லாம் ஈடு கொடுக்காது. எவ்வளவோ சொல்லியும் கைது செய்து கொண்டு சென்று விட்டனர். நான் எந்த மோசடியும் செய்யவில்லை ” என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!