’கங்குபாய்’ படப்புகழ் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ‘ஹீரமண்டி’ சீரிஸ் படப்பிடிப்பின் போது கோபத்தில் செல்ஃபோனைத் தூக்கி எறிந்தார் என்ற செய்தி வெளியானது. இதுகுறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
’பத்மாவத்’, ‘கங்குபாய்’ போன்ற படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள தொடர் ‘ஹீரமண்டி’. இதில் சோனாக்ஷி சின்ஹா, மனிஷா கொய்ராலா, அதிதி ராவ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
இந்தக் கதையின் படப்பிடிப்பின் போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கோபத்தில் செட்டில் தனது செல்ஃபோனைத் தூக்கி எறிந்தார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, நடிகை சோனாக்ஹி சின்ஹாவிடம் பாலிவுட் ஊடகங்கள் கேள்வி எழுப்பினர். இதனை வதந்தி என்று மறுத்துள்ளார் அவர்.
மேலும் பேசிய அவர், “இந்த செய்திகள் வதந்தி. ஆனால், தான் எதிர்பார்த்தது சிறப்பாக வரும் வரை அவர் எங்களை வேலை வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், திரையில் நீங்கள் அந்த மேஜிக்கை கண்டு ரசிக்கிறீர்கள் இல்லையா? அவருடைய கதையில் யாராவது ஒத்துழைக்கவில்லை என்றாலோ அல்லது குழப்பத்தை ஏற்படுத்தினாலோ அதுகுறித்து கேட்பதற்கு அவருக்கு உரிமை உண்டு என நினைக்கிறேன்.
அவருடன் வேலை பார்த்தது உண்மையிலேயே மகிழ்ச்சியான அனுபவம். இதுபோன்ற வதந்திகளை அவருடன் வேலை பார்ப்பதற்கு முன்பு நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், அதெல்லாம் பொய். உண்மையான திறமைகளை அவர் ஊக்குவிப்பார்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!
494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!
பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!